Friday, 26 August 2011

தமிழர் மூவர் தூக்குத்தண்டனையை இரத்து செய்யக்கோரி பெண் வழக்கறிஞர்கள் மூவர் உண்ணாநிலைப்போராட்டம்

மேனாள் இந்தியப்பிரதமர் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி பெண்கள் மைய வழக்கறிஞர் கயல், வடிவாம்பாள் மற்றும் சுஜாதா ஆகியோர் உண்ணாநிலைப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


Thursday, 18 August 2011

அன்னா ஹசாரேவும் விஜயகாந்த்தும் சந்தித்தால்...

அன்னா ஹசாரேவும் விஜயகாந்த்தும் சந்தித்தால் என்ன நடக்கும்....?

கடந்த ஐந்தாண்டுகளாக மேடைகளில் " தான் ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஊழலை ஒழிப்பேன்" என்று கூறி வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை சமீபகாலமாக ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிவரும் அன்னா ஹசாரேவும் சந்தித்தால் என்ன நடக்கும்....

நடிகர் விஜயகாந்த் கண்டிப்பாக தனது "ரமணா" பட டிவிடியை கொடுத்துப்பார்க்கச்சொல்வார்...

வேறு என்ன சொல்வார் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை... இதை படிக்கும் உங்களுக்கு தெரிந்தால் கருத்திடுங்கள்...


[ 600+ மதிப்பெண்ணை 12 ஆம் வகுப்பு தேர்வில் பெற்று சென்னையிலுள்ள முதன்மை கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை விஸ்காம் படிப்பில் விஜயகாந்தின் மூத்த மகன் சேர்ந்துள்ளதாக கேள்விப்பட்டேன்... அக்கல்லூரியில் விஸ்காமில் சேர தகுதியற்ற மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் எம்.எல்.ஏ யின் மகனுக்கு சீட் கிடைத்தது எப்படி...? இது எம்.எ.ஏ என்ற பதவியின் லஞ்சத்தால் கிடைத்த சீட்டா? ]

Wednesday, 17 August 2011

கோவை ஆன்லைன் தோழர்களே இன்று மதியம் 2 மணி நேரம் கணிணிக்கு விடுமுறை விடுங்கள்

மூவர் உயிர் காக்க கோவையில் முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்

நம் தமிழர் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர்காக்க கோவை தந்தி அலுவலகத்தில் மதியம் 2 மணியளவில் தமிழக முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது.

தந்தி படிவம் காந்திபுரம் விரைவு பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் படிப்பகத்தில் கிடைக்கும்..,

கோவையில் ஆன்லைனில் ஈழ ஆதரவு எழுதும் தோழர்கள் இன்றும் மதியம் தந்தி அலுவலகத்தில் திரண்டு உங்களின் ஆக்கப்பூர்வமான ஆதரவினை காட்டுங்கள்...




கிறிசுடியன் பிரதர்ஸ் - திரை விமர்சனம்

சரத்குமார், மோகன்லால், சுரேஷ் கோபி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள
கிறிசுடியன் பிரதர்ஸ் மலையாள மொழித்திரைப்படம்



முன்னணி நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடிப்பது என்பது தமிழ்த்திரைப்படங்களில் தற்போது பெரிதளவு வருவதில்லை...

ஆனால் மலையாளத்திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து யதார்த்தமாக நடிப்பது வழமையாக உள்ளது..

இத்திரைப்படத்தில்

1) மோகன் லால்
2) திலீப்
3) சுரேஷ் கோபி
4) சரத் குமார்
5) பிஜி மேனன்
6) லக்‌ஷ்மி ராய்
7) காவ்யா மாதவன்
8) கனிகா

இத்தனை நட்சத்திர பட்டாளங்களையும் வைத்துக்கொண்டு அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் ஜோசி இயக்கியுள்ளார்...

கிறித்துவ பணியாளராக பயிற்சி பெற செல்லும் திலீபனின் நகைச்சுவையும் இவருக்கு ஜோடியாக காவ்யா மாதவன்

வங்கி மேலாளரான மோகன்லால் சதியால் கொலைக்குற்றவாளியாகி டானாக மாறி அதிரடியில் கலக்கியுள்ளார்.. இவரது காதலியாக ஒரே ஒரு பாடலில் மட்டும் வரும் லக்‌ஷ்மி ராய்




பெண்களை பாலியல் தொழிலுக்குத்தள்ளுபவர்களை அழிக்கும் மும்பை டானாக சரத்குமாரும் அதிரடியில் கலக்கியுள்ளார்..

கொலைகளை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரியாக மோகன் லால் இவருக்கு ஜோடியாக  கனிகா...

வில்லனாக பிஜி மேனன் மற்றும் பலர்...

மலையாள திரைப்படத்தின் தன்மைக்கேற்றாற்போல் நகைச்சுவைகளும், யதார்த்தமான நடிப்பும், காதலும், அதிரடியும் உள்ளது...

மொத்தத்தில் ஆக்சன் திரைப்பட ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கும்...







வலைப்பூவில் நான்...

எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இவ் வலையகம் மூலம் உங்களிடம் வலைஞன்....